மின்சார கட்டணம் அதிகரித்திருந்தாலும், தற்போதைக்கு நீர் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கான எந்தவொரு கலந்துரையாடலும் இதுவரை நடைபெறவில்லை என என குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் நீர் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் மாற்றம் செய்யப்படுமானால் அது ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னரே அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.


