Saturday, February 28, 2026
HuisLocalயாழில் கடன் சுமை காரணமாக இளைஞர் ஒருவர் உயிர் மாய்ப்பு..!

யாழில் கடன் சுமை காரணமாக இளைஞர் ஒருவர் உயிர் மாய்ப்பு..!

யாழ்ப்பாணத்தில், கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் இன்றைய தினம்(07.02.2026) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

இளவாலை – அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

அவர் நேற்றைய தினம் வீட்டிலிருந்து வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் – அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed